*கனவுலகவாசி (பகுதி 2)
#சிவசங்கர்
நடக்கத் தொடங்கியவன்
மிதக்கத் தொடங்கினேன்!
நிலவிற்குச் சற்றே
அருகாமையில் சென்றதன்
கதகதப்பினை
என் உதடுகளின் உளறல்கள்
வேகமாய் வெளிக்கொணரின!
பெண்ணே! ஒரு கேள்வி!
கனவுலகில் சுற்றிப்பார்க்கும்
அளவுக்கு என்ன இருக்கிறது!
இங்கு எதுவும் புதிதல்லதான்!
ஆனால் கனவானது நனவின்
மற்றொருப் பரிமாணம்!
இரண்டிற்கும் இடையில்
ஆக்கிரமித்திருக்கும்
தொங்கும் பாலம்தான்
விழிகளின் உறக்கம்!
இருக்கட்டும்!
இருப்பினும் நனவுலகில்
நான் ஆளாக்கப்பட்ட
துயரங்களுக்கும்,
நேர்ந்த துரோகங்களுக்கும்,
கைதேர்ந்தோரின் வஞ்சகச்
சொற்களுக்கும்
மாற்று மருந்தாகவா
அமைந்துவிடப்போகிறது
இந்தக் கனவு!
அப்படியில்லை!
வாழ்வின் நெருடலானப்
படலங்களை மட்டுமே
அனுபவித்தவன்,
அதிலிருந்து மீள
மதுவிடம் செல்கிறானே!
அதை விட
இது சிறந்ததொரு மருந்தாகவே
அமையலாம்!
இங்கு எதுவும் கிடைக்கும்!!!
நீ விரும்பும் பட்சத்தில்!!!
அப்படியா?
எதுவும் கிடைக்குமா!
என் பழையக் காதலி!
அவளை நான் மிகவும் விரும்புகிறேன்!
அவளிடம் மீண்டும் சில வினாடிகள்
பேசத்துடிக்கிறேன்!!!
அவளுக்குத் தெரியாமலே!!
சாத்தியமா??
முடியும், திறமான நிச்சயம்!!!
இப்போது
அவள்தான் நான்!
சொல்லியச் சுருக்கில்
அணைத்துக்கொண்டாள்!
அல்லி இதழ்களுக்குள்
இறங்கத் தொடங்கினேன்!!!
- கனவுலகில் பயணிப்போம்.