*கனவுலகவாசி (பகுதி 5)
#சிவசங்கர்
கனவுலக தேவதையுடன்
விடியும்வரைப்
பேசப்போகிறேன்!
கனவு
நிரந்தரமில்லா ஒரு பயணம்!
உண்மையான மாயை!
கனவில் ஓலமிடும்
பாத்திரங்கள்
நம் குணாதிசயங்களே!
உள்ளத்தின்
விருப்பு வெறுப்புகளே,
கனவில் நடக்கும்
சம்பவங்கள்!
எதிர்பாராத விதமாய்
எதிர்கால நிகழ்வுகள்
அதில் தோன்றும்
அதிசயங்கள் !
இவற்றையெல்லாம்
நீ அறிவாயா?
தெரியவில்லையே??
நான் அறிவேனா??
ஆராய முடியவில்லை!
நீ அறிவாய்!!!
எப்படிச் சொல்கிறாய்?
ஆம், உன் கனவில்
நீ காண்பதும்,
ஏதோ ஒரு குரல் கூற
நீ கேட்பவைகளும்,
எங்கோ எதிலோ இருந்து
நீ அறிந்தவைதான்!!!
அப்படியானால்
கனவு ஒன்றும் புதிதாய்க்
காட்டுவதில்லையா??
நினைவுகளை நினைவுகூறும்
இடம்தான் கனவா??
அப்படியும் சொல்லலாம்!
அது சரி உன் கனவில் உனக்கு
மிகவும் பிடித்தது என்ன???
குறிப்பிட்டுச் சொல்ல
முடியவில்லையென்றாலும்
என் ஆகச்சிறந்த
மன திட்பங்களின்
எதிர்பார்ப்புகளின்,
எனக்குப் பிடித்தவற்றின்
ஒட்டுமொத்தக் கலவையாக
நீ இருக்கிறாய்!!!
உருகும் பனிக்கட்டியாய்
சத்தமின்றி வெட்கத்தோடு,
வேகமாய்ச் சிரித்தாள்!
ஏன் சிரிக்கிறாய்??
புரியாமல் பேசுகிறாய்!
நான் நீ தான் !!!!
நான் தான் நீ !!!
- கனவுலகில் பயணிப்போம்.
No comments:
Post a Comment