*கனவுலகவாசி (பகுதி 6)
#சிவசங்கர்
உன்னை நான்
என்ன பெயர் சொல்லி அழைக்க?
உனக்கு பிடித்தமானவைகளின்
உன் மன இயல்புகளின்
இன்னொரு பிறவியே நான்!!!
ஆக உன் நிலையிலிருந்து
என்னை எந்தப் பெயரிலும்
அழைக்கலாம் நீ!!
எனக்குப் பிடித்தமான
ஒரு பெண்ணின் பெயர்
இருக்கிறது!!!
அப்படியா?? யாரவள்??
உனக்குத்தான் எல்லாம் தெரியுமே?
எங்கே! நீயே சொல்லுப் பார்ப்போம்!!!
தெரியும்!!!
உன்னைப் பேச வைக்க நினைத்தேன்!!
உனக்குப் பிடித்தமான
அந்தப் பெண் நாஸ்தென்கா !!!
அட!! அவளைப்பற்றி
உனக்குத் தெரியுமா??
தெரியுமே!!
நான்கே இரவுகளில்
தாஸ்தோஸ்வ்கியைக்
காதலித்துப் பித்தனாக்கிக்
கவிஞனாக்கி,
பித்தனும் கவிஞனும்
ஒன்றுதான்!!
மேலே சொல் பெண்ணே!!!!
ஆம், ஐந்தாவதுப் பகலில்
மீண்டும் பழையக் காதலனுடன்
சென்று விட்டாளே!!! அந்த
நாஸ்தென்கா தானே!!!
இல்லை இல்லை...
இமைப்பொழுதும்
இதனை ஏற்க மாட்டேன்!
அவள் தூய்மையானவள்
என்று அவரே
ஏற்றுக்கொண்டுவிட்டாரே!
அவளும் அந்தக் கடிதத்தில்,
"உங்களைக்
காதலிக்கவே செய்கிறேன்,
உங்கள் இருவரையும்
ஒருங்கே காதலிக்க நேர்ந்தால்,
எப்படி இன்புறுவேன்,
அவர் நீங்களாக இருக்கக்கூடாதா"
என்று விட்டுக்கொடுக்காமல் பேசி
நீங்காத் துயரமடைகிறாளே!!!!!
இது போதாதா என்ன??
ஒரு ஜென்மம் முழுவதற்கும்
இது போதும் என்று அவர்
புலம்பினாரே!!
அதன் பிறகு எத்தனைப்
பாடல்களில் இந்த வரிகள்
அமைந்தன தெரியுமா!
காதலின் இறுக்கமானக்
கட்டுப்பாடுகளைத்
தளர்த்திக்கொண்டு,
சேர்வது பற்றிப் பின்னால்
பார்த்துக்கொள்ளலாம் என்ற
அவநம்பிக்கையுடன் காதலிப்பதற்கு
இப்படிப் பிரிதல்
எவ்வளவு புனிதகரமானச் செயல்!!!
அதன் பிறகும் அவள் அவரைக்
காதலிப்பது எவ்வளவு உன்னதம்!!!
பேசிக்கொண்டிருக்கையில்
என் மீது மட்டும் மழை
பொழிந்தது!!!!
புரியாமல் கனவு தேவதையிடம்
கேட்கிறேன்!!
அவள் பதில் சொல்லும் முன்
அம்மா எழுப்பிவிட்டாள்!!!
- கனவுலகில் பயணிப்போம்.
No comments:
Post a Comment