Sunday 1 November 2015

*கனவுலகவாசி (பகுதி 9)

*கனவுலகவாசி (பகுதி 9)

#சிவசங்கர்

வந்துவிட்டாயா?

எங்கே நீ வராமல் 

போய்விடுவாயோ

என 

அச்சத்தில்

மூழ்கிக்கொண்டிருந்தேன்!


நீ வரும் கணத்திற்குள் 
நீ தேவதையாய்ப் பார்க்கும்
நானே தூங்கிவிடுவேன் போலும்!


என் தேவதையே!

எப்படி நான் வராதிருந்திருப்பேன்!
மனிதன் 
உழைப்பதற்குச் சமமாய்த்
தூங்குவதற்கும் 
கடமைப்பட்டவனாயிற்றே!

ஆம்,
ஆனால் தற்போதெல்லாம்
இந்த மனிதர்கள்
உறங்கவே நெடுநேரமாகிறது!

கனவில் உலா போவதற்கெல்லாம் 
உங்களுக்கு நேரமுண்டா என்ன!

அட 
நனவுக்காதலியைப் போலவே
நீயும் கோபிக்கிறாயே!

ஆம், அதற்கென்ன செய்வது!
காலமும் கலாச்சாரமும் 

மாறிக்கொண்டே இருக்கிறது!
இங்கு நேரமின்மையே 
அனைவருக்கும் மிகப்பெரியச்
சிக்கல் முடிச்சுகளாகிறது!

கனவுலகவாசி!
மூர்க்கத்தனமிது 
நேரமின்மை என்பது 
நீ உன் இயலாமைக்கும்
முயலாமைக்கும் 
சேர்த்துச்சொல்லும் 
நொண்டிச்சாக்கு!
மியாமி தொடங்கி
மெரினா வரை 
சென்று குதூகலிக்கும் 
அனைவருக்குமே
ஒரு வேலை, 
நேரமின்மை
நண்பர்கள் என
எண்ணிலடங்கா 
நேர்க்காணல்கள்
இருக்கவே செய்கின்றன!

அதற்காக அவர்கள்
வாழ்வின் இன்பகரமானப்
பகுதிகளை இழக்கிறார்களா 
இல்லைத் துறக்கிறார்களா!

"வாழ்தலின் நோக்கம்
வாழ்தலே" என 
நம் ஊர் கோபிநாத்
சொல்லியிருப்பதை
அநேகமானவர்கள்
அணுகவே செய்வதில்லை!


- கனவுலகில் பயணிப்போம்.

No comments:

Post a Comment