Sunday 1 November 2015

*கனவுலகவாசி (பகுதி 10)

*கனவுலகவாசி (பகுதி 10)

#சிவசங்கர்

மனித வாழ்வில் 
முக்கியமானது?

காடுகள்தாம்!

காடுகளா?
நான் உலகப்பெரும்
தத்துவத்தை
உன்னிடம் எதிர்பார்த்தேன்!

அரியபெரும்
தத்துவம்தான் இது!
மனிதம் தோன்றியதும்
கலாச்சாரங்கள் கருவுற்றதும்
அவன் ஞானியானதும்
ஆண்டியானதும்
வாழ்வு முடிந்து
வடக்குத்தேடிப் போனதும்
யாவுமே காட்டில்தான்!


அன்றையக் காடுகளே
இன்றைய நகரங்கள்!


பேசப்பழகி - சமைக்கப்பழகி,
பழகப்பழகி - பழகிப்பழகி,
வேட்டையாடி வாழ்ந்து
இனப்பெருக்கம் செய்து


இன்றோ
வாழ்வளித்த விலங்குகளை
வாழவிடாது அழித்துக் 
கொண்டிருக்கிறான்!

இருப்பினும்
ஆங்காங்கே சில விலங்குகள்
மனிதத்துடன் காட்டிலும்,


மனிதப் போர்வையில்
நகரத்திலும் வாழ்கின்றன!

நகரங்களை விட
காட்டில் கொடிய
மிருகங்கள் குறைவே!

காட்டினை விட
அமைதியும் நிழலும் 
நகரத்தில் குறைவே!


அடேயப்பா!
அரியபெரும் உண்மைதான்
அறிய வேண்டிய உண்மைதான்!


இன்றையக் கனவுக்காட்சி
மன நிறைவாகவே 
இருந்தது!



- கனவுலகில் பயணிப்போம்.

No comments:

Post a Comment