Sunday 1 November 2015

கனவுலகவாசி (பகுதி 11)

*கனவுலகவாசி (பகுதி 11)

#சிவசங்கர்


ஒரு பகல் 
மரணித்ததும்,


ஒரு இரவு  
ஜனனமாகிறது!

இதற்கிடையில் 

மனிதரிடம் உறவாடும் 

ஓர் ஜீவராசிதான்

இந்தக்கனவு!!


கனவுத்தோழி கூற
நான் கேட்டேன்,
உண்மையில்
எதிர்காலக்கனவு
சுபிட்சக் கனவு
என்பதெல்லாம் என்ன?


அது உண்மையில்
நிச்சயமற்ற ஒன்று!

நாம் ஒரு நூற்றாண்டிற்கு
அடித்தளமிடுகிறோம்!
அதன் போக்கையும் 
முடிவையும்
அடுத்த தலைமுறையின்
இறுதியில்தான் அறியமுடியும்!

ஆம் கனவுலகவாசியே!
வெட்சிக் கரந்தையென
உள்ளூர் போர்களிலும்,

தாயகம் தாண்டிய
உலகப்போர்களிலும்,

அலெக்சாண்டரின் 
அனைத்துப்போர்களிலும்,

குருஷேத்திரப் போர்களிலும்

சிப்பாய்க்கலகத்திலும்

இன்னும் 
எத்தனையோப்
போர்களில்

இளமையானவர்களைப்
வெகுண்டெழச்செய்துப்
புரட்சியாளர்களாக்கி,

உரிமை மீறல்
அதிகார மாற்றம்
அநீதி மற்றும்
சுரண்டல்களுக்காக
ஆயுதம் தொட்டு,

பனிமலை மீதேறும்
கனவுகளுடன் திரியும்
பாமர மனிதர்களை
மூர்க்கத்தின் கையில்
முடமாக்கிக்
கொடுத்துவிட்டு,

துணைவர்கள் 
இல்லா
அகதிகளாய்க் 
கடல்கடந்த
நாடுகளுக்குக் 
கப்பலேற்றி,

அனுப்பிடும் 
அந்தச் சமயம்
அவர்களுள் 
எழும் கேள்விகள்
அனைத்தும் 
கனவுப்பொடியாய்
உதிருகின்றனவே!

அதிலும் 
சிலப் போராளிகளுக்கு,

கனவுகளின் 
பலிப்பீடத்தில்
தோட்டாக்களால்,
தொடுக்கப்பட்ட 
மாலைகளே
பரிசாய் 
விழுகின்றனவே!


இயற்கையன்றி
வேறாரும் 
கையாள முடியாக்
கனவுதான் 
எதிர்காலம்!

                                               - கனவுலகில் பயணிப்போம்.

No comments:

Post a Comment